சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு வழக்கத்தைவிட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிப்ரவரி 15-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சமவெளி பகுதிகளில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.2 டிகிரி, குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 15 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.