4 நாடுகளுக்கான மகளிர் ஆக்கி தொடர்; சிலியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா

4 weeks ago 10

புதுடெல்லி,

ஜூனியர் மகளிர் உலக கோப்பைக்கான ஆக்கி போட்டிகள் வருகிற டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளன. இதற்கு தயாராகும் வகையில், இந்திய மகளிர் அணி, 4 நாடுகளுக்கான ஆக்கி போட்டி தொடரில் விளையாடுகிறது. அர்ஜெண்டினா, உருகுவே, சிலி மற்றும் இந்தியா ஆகிய 4 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டி தொடர் இன்று தொடங்கி ஜூன் 2-ந்தேதி வரை நடைபெறும்.

இந்நிலையில், அர்ஜெண்டினாவின் ரொசாரியோ நகரில் நடந்த போட்டி ஒன்றில், இந்தியா மற்றும் சிலி நாடுகளை சேர்ந்த அணிகள் விளையாடின. இதில், போட்டியின் 20-வது நிமிடத்தில் கோல் அடித்து, வீராங்கனை ஜாவேரியா சாயின்ஸ் சிலி அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

எனினும், 39-வது நிமிடத்தில் இந்தியாவின் சுக்வீர் கவுர் கோல் அடித்து அதனை சமன்படுத்தினார். போட்டியின் வெற்றியை முடிவு செய்யும் கடைசி நிமிடங்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. இந்திய வீராங்கனை கனிகா சிவாச் போட்டியின் 58-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து வெற்றியை உறுதிப்படுத்தினார்.

இதனால், சிலியை 2-1 புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. அடுத்து உருகுவே அணிக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா விளையாடும்.

Read Entire Article