4 ஏக்கர் பரப்பளவு: டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்.,அமைப்புக்கு பிரமாண்ட அலுவலகம்

3 hours ago 2

புதுடெல்லி,

1939-ம் ஆண்டு முதல் உள்ளூர் அலுவலகம் தற் போது டெல்லியில் பிர மாண்டமாக கட்டி எழுப்பப் பட்டுள்ள இந்த இடத்தில்தான் திறக்கப் பட்டது. இந்த அலுவலகத்தின் 2-வது தளம் 1962-ம் ஆண்டு திறக்கப் பட்டது. சுமார் 50 ஆண்டு களுக்கு பிறகு பிரமாண்டமாக அலுவலகம் கட்ட திட்ட மிடப்பட்டு அடிக்கல் நாட்டப் பட்டு பணிகள் தொடங்கியது. டெல்லி கேசவ்குஞ்சில் 4 ஏக்கர் பரப்பளவில் 3 கோபுரங்களுடன் இந்த அலுவலகம் கட்டப்பட் டுள்ளது. ஒவ்வொரு கோபு ரத்திலும் 12 மாடிகள் உள்ளது. சாதாரண கட்டட மாக இல்லாமல் ஆர்.எஸ்.எஸ்.சின் அளப்பரிய சேவை களின் நினைவு சின்னமாக கட்டி எழுப்பி இருக்கிறார்கள.குஜராத்தை சேர்ந்த கட்டடக் கலைஞரால் 75 ஆயிரம் தன்னார்வலர் களால் கட்டப் பட்டுள்ளது. பொதுமக்களிடம் திரட்டப் பட்ட ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் தங்குவதற்கு 300 அறைகள், சித்தாந்த கூட்டங் கள் நடத்த 2 பிரமாண்டமான ஆடிட் டோரியங்கள், ஷாகாக்கள் நடத்த ஹெட்கேவார் சிலை அமைக்கப்பட்டுள்ள பரந்த புல்வெளி மைதானம். இந்த புதிய அலுவலகத்தின் மையப் பகுதியில் மிகப்பெரிய நூலகம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த நூலகத்தில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய பவுத்த நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் என 8,500-க்கு மேற் பட்ட நூல்கள் இடம் பெற்றுள்ளன.விவாத அரங்கம் 473 மற்றும் 123 பேர் அமரக் கூடிய வகையில் இடம் பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அமர்ந்து சாப்பிடும் உணவு அறை ஆகியவையும் உள்ளன.முதல் கோபுரத்துக்கு சத்னா டவர் என்றும 2-வது கோபுரத்துக்கு பிரார்னா டவர் என்றும், 3-து கோபு ரத்துக்கு அர்ச்சனா டவர் என்றும் பெயர் சூட்டப் பட்டுள்ளது.

2-வது கோபுரத்தின் 9-வது மாடியில் பத்திரிகை யாளர்கள் அறை மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தங்கும் அறை இடம் பெற்றுள்ளது.வெளியிடங்களில் இருந்து வரும் ஊழியர்கள் தங்குவ தற்கு 3-வது கோபுரத்தில் 80 அறைகள் ஒதுக்கப்பட டுள்ளது. தரை தளத்தில் 5 படுக்கை வசதி யுடன் கூடிய ஆஸ்பத்திரியும் இடம் பெற்றுள்ளது. தற்போது நாடு முழுவதும் 3,500 முழுநேர ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த புதிய அலுவலகம் உருவான தன் மூலம் பணிகளை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளார்கள்.

Read Entire Article