23 கிராம் எம்டிஎம்ஏவுடன் பிரபல பெண் யூடியூபர் காதலனுடன் கைது

7 hours ago 3

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் நடத்திய சோதனையில் 23 கிராம் எம்டிஎம்ஏவுடன் பிரபல பெண் யூடியூபர், அவரது காதலன் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுப்பதற்காக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் தினமும் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு எம்டிஎம்ஏ, கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கொச்சி காக்கநாடு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக திருக்காக்கரை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தொடர்ந்து நேற்று இரவு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் ஒரு குடியிருப்பில் தங்கி இருந்த 2 பேரிடம் இருந்து 23 கிராம் எம்டிஎம்ஏ கைப்பற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்தனர். இதில் அவர்கள் கோழிக்கோட்டை சேர்ந்த ரின்சி, அவரது காதலன் யாசர் அராபத் என்பது தெரியவந்தது. ரின்சி பிரபல யூடியூபர் ஆவார். அருவருக்கும் எம்டிஎம்ஏ எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 23 கிராம் எம்டிஎம்ஏவுடன் பிரபல பெண் யூடியூபர் காதலனுடன் கைது appeared first on Dinakaran.

Read Entire Article