2028 வரை இலவசமாக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

4 months ago 29
செறிவூட்டப்பட்ட அரிசியை ரேசன் கடைகளில் 2028ஆம் ஆண்டு வரை  இலவசமாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏழைகள் நல உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 17,082 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் அத்திட்டம், மக்களுக்கு ரத்த சோகை மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டை தடுக்க உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் எல்லைப்பகுதியில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ராஜஸ்தான், பஞ்சாப் மாநில எல்லைப் பகுதிகளில் 2,280 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Read Entire Article