“2026-ல் பாஜக தலைமையில் ஆட்சி அமையும்போது திமுக ஊழல்கள் வெளிவரும்” - ஹெச்.ராஜா

8 months ago 42

திருநெல்வேலி: “தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு பாஜக தலைமையிலான ஆட்சி அமையும்போது திமுக அரசின் ஊழல்கள் வெளியே கொண்டுவரப்படும்,” என்று பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

திருநெல்வேலியில் பாஜக அலுவலகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட பாஜக நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று (அக்.4) நடைபெற்றது. இதில் பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:“சென்னை மெட்ரோ திட்டத்துக்கு ரூ.63 ஆயிரத்து 246 கோடி நிதியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Read Entire Article