திருநெல்வேலி: “பிரதமர் மோடி 140 கோடி இந்தியர்களின் சிகரம். ஆபரேஷன் சிந்தூரை வரவேற்கிறேன். வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் 2026 தேர்தலில் தமிழகத்தில் நடத்தப்படும்,” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “இந்தியா சுதந்திரமடைந்தபோது ஏற்பட்ட சந்தோஷத்தைவிட, இன்று அடைந்த சந்தோஷம் மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைந்துள்ளது. காஷ்மீர் பயங்கரவாத சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்களின் ஆன்மா சாந்தி அடையும். பிரதமர் மோடி தனி நபர் அல்ல, 140 கோடி இந்தியர்களின் சிகரமாக விளங்குகிறார்.