புதுச்சேரி: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தமிழகத்திலும் போட்டியிடும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் என்ஆர். காங்கிரஸ் கட்சியின் 15-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. கிழக்கு கடற்கரைச்சாலையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிறுவனரும், முதல்வருமான ரங்கசாமி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். அதையடுத்து கட்சி அலுவலகத்தில் அப்பா பைத்தியம் சுவாமி படத்துக்கு மலர் தூவி பூஜை செய்தார்.