
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;
அதிமுக இத்துடன் முடிந்துவிட்டது என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார். ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார்.. அதிமுகவின் வெற்றிக்கு இங்கு குவிந்திருக்கும் சிப்பாய்களை பாருங்கள். திமுகவுக்கு கவலை ஏன்? இங்குள்ள ஒவ்வொருவரும் 25 வாக்குகளை அதிமுக வேட்பாளருக்கு பெற்று கொடுக்க வேண்டும். நமக்கு கூட்டணி பலமானதாக அமையும். யாரும் கவலைப்பட வேண்டாம்.
முதற்கட்டமாக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில் இருந்து ஸ்டாலின் பதற்றமாக இருக்கிறார். அதிமுக யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன? பொன் விழா கண்ட கட்சி இது பயம் வந்துவிட்டது ஸ்டாலினுக்கு.. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததன் நோக்கம், நமது வேட்பாளருக்கு வாக்குகள் சிதறாமல் கிடைக்க வேண்டும். திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காக கூட்டணி வைத்துள்ளோம். அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்று சொல்கிறார்கள். அதிமுக பொன் விழா கண்ட கட்சி.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும். 10 தோல்வி பழனிசாமியா? எந்த கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது. தேர்தலில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி பெற வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணியால் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது."
இவ்வாறு அவர் பேசினார்.