அகமதாபாத்: பஞ்சாப் அணிக்கு 191 ரன்களை வெற்றி இலக்காக பெங்களூரு அணி நிர்ணயம் செய்தது. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. பின்னர் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இறுதிப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
The post 2025 ஐபிஎல் டி20 பஞ்சாப் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி appeared first on Dinakaran.