தர்மபுரி, ஜன.14: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஈச்சம்பள்ளம் பகுதியில், கடந்த வாரம் 2 யானைகள் முகாமிட்டிருந்தன. இந்த யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இந்நிலையில் பாப்பாரப்பட்டி பெரியூர் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு 2 யானைகள் வந்தது. இந்த யானைகள் சிலுவத்துகொள்ளை, பூதிநத்தம் பகுதியில் சுற்றித்திரிகிறது. அந்த பகுதியில் விளை பயிர்களை யானைகள் தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. இதுபற்றி அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையிலான வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அந்த யானைகளை பெரியூர் வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கிராம மக்கள் யாரும் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு செல்லாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post 2 யானைகள் முகாம் appeared first on Dinakaran.