திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள கோபாலபுரம் ஊராட்சி பகுதியில் இருளர் இன மக்களுக்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் சமுதாய கழிவறை கட்டப்பட்டுள்ளது. இந்த கழிவறை கட்டி முடிக்கப்பட்டு, 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், இருளர் இன மக்கள் பல்வேறு இன்னலுக் குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு தெரிவித்ததாவது: கோபாலபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள குளத்து புறம்போக்கு பகுதியில் சுமார் 20 இருளர் இன குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வந்தனர். இந்நிலையில், இம்மக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, கோபாலபுரம் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் சாலை வசதி இல்லாத பகுதியில் அரசு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கியது.