121-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியின் படத்துடன் அஞ்சல் உறை வெளியீடு

2 months ago 12

சென்னை: கால்நடை மருத்துவக் கல்லூரியின் 121-வது ஆண்டு விழாவையொட்டி, கல்லூரி கட்டிட படத்துடன் கூடிய அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி கடந்த 1903-ம் ஆண்டு அக்.1-ம் தேதி தொடங்கப்பட்டது.

இந்தியாவின் மூன்றாவது கால்நடை மருத்துவக் கல்லூரியான இதை தொடங்கி 121 ஆண்டுகள் ஆனதை நினைவூட்டும் வகையில் அஞ்சல் உறை வெளியிட திட்டமிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி, சென்னை, வேப்பேரியில் உள்ள கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில், கல்லூரியின் தலைவர் (பொ) ஆர்.கருணாகரன் வரவேற்புரையாற்றினார்.

Read Entire Article