100 நாள் வேலைத் திட்ட நிலுவைத் தொகை ரூ.1400 கோடியை மத்திய அரசு விடுவிக்க செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

13 hours ago 3

சென்னை: “கடந்த ஆண்டு 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.2,900 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் சம்பளத் தொகை போக, பொருட்கள் வாங்கியதற்காக வழங்க வேண்டிய ரூ.1,400 கோடியை மத்திய பாஜக அரசு நிலுவையில் வைத்துள்ளது. இதனை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தி, இலவச கல்வி வழங்கிய பெருந்தலைவர் காமராஜரின் பெயரில் திருச்சியில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்துடன் அமைக்கப்படவுள்ள மாபெரும் நூலகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Read Entire Article