சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் வீட்டில் இருந்த 1.5 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். நுங்கம்பாக்கம் லேக் ஏரியா 5வது குறுக்கு தெருவில் சுலைமான் என்பவரின் வீட்டில் கடந்த ஜனவரி.3ம் தேதி கொள்ளை அடிக்கப்பட்டது. வீட்டில் இருந்த 1.5 கிலோ தங்கம், வைர நகைகள், ரூ.10 லட்சம் ரொக்கம், லேப்டாப், ஐபோன், கைக்கடிகாரங்கள் திருடப்பட்டது. கார் ஓட்டுநராக இருந்த நேபாளத்தை சேர்ந்த சந்திர பரேயர் என்பவரை நுங்கம்பாக்கம் போலீஸ் கைது செய்தது.
The post 1.5 கிலோ நகை கொள்ளை: கார் ஒட்டுநர் கைது appeared first on Dinakaran.