ஶ்ரீவில்லி. அருகே மாவூத்து உதயகிரிநாதர் கோயிலின் ரூ.10 கோடி மதிப்பிலான 388 ஏக்கர் விளை நிலங்கள் மீட்பு 

1 week ago 11

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே மாவூத்து உதயகிரிநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 388 ஏக்கர் விளை நிலங்களை மீட்ட அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பெயரில் பட்டா பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்துக்கு உட்பட்ட கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்பதற்காக 2021-ம் ஆண்டு பட்ஜெட்டில் மாவட்டம் தோறும் கோயில் நிலங்களுக்கான தனி வட்டாட்சியர் உட்பட புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்டம் தோறும் கோயில் பெயரில் உள்ள நிலங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்றது. ஆய்வின் போது, ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மாவூத்து உதயகிரிநாதர் கோயிலுக்கு சொந்தமான 388 ஏக்கர் நிலம் கோயில் பரம்பரை அறங்காவலர் காசிகிரி கோசாகியர்பெயரில் இருந்தது கண்டறியப்பட்டது.

Read Entire Article