வைரமுத்து மீது பாடகி சுசித்ரா குற்றச்சாட்டு

3 days ago 8

சென்னை,

மலையாள சினிமாவில் பாலியல் ரீதியாக எழுந்த பிரச்சனைகளால் முன்னணி நடிகர்கள் பலரின் பெயர்கள் வெளிவந்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதற்கிடையே, தமிழ் சினிமாவிலும் பாலியல் சீண்டல் தொடர்பான புகார்களை தெரிவிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

பிரபல பின்னணிப்பாடகி சுசித்ரா. தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் 100-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழ் பட உலகில் 'மே மாசம் 98-ல் மேஜர் ஆனேனே', 'டோலு டோலு தான் அடிக்கிறான்', 'வாடா பின்லேடா', 'குட்டி பிசாசே குட்டி பிசாசே' போன்ற பாடல்களை பாடி பிரபலமான பின்னணி பாடகி சுசித்ரா. 'ஜே.ஜே.', 'ஆயுத எழுத்து', 'பலே பாண்டியா' போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தும் இருக்கிறார். சுசித்ரா கடந்த ஆண்டு நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களை டுவிட்டர் பக்கத்தில் 'சுசி லீக்ஸ்' எனும் பெயரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இவர் நடிகர் கார்த்திக் குமாரின் முன்னாள் மனைவி ஆவார்.

இந்நிலையில், பிரபல பாடகியும் நடிகையுமான சுசித்ரா சமீபத்தில் தனியார் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

'வைரமுத்துவை பொறுத்த வரைக்கும் பாடகிகளை தான் முதலில் குறி வைப்பார். அதிலும் நான் 'மே மாசம் 98-ல் மேஜர் ஆனேனே' பாடலை பாடியிருக்கிறேன். அந்தப் பாடலைக் கேட்ட பிறகு எனக்கு போன்செய்து 'உன் பாடலில் காமம் இருக்கிறது. ஒரு காதல் இருக்கிறது. உன்னுடைய வாய்ஸ் ரொம்ப அற்புதமாக இருக்கிறது' என்றார். அந்தப் பாடலில் காதல் இருக்கிறது என்றால், அதில் ஆடிய ரீமாசென்னைப் பார்த்து காதல் வரலாம். அந்தப் பாட்டைப் பற்றி அவ்வளவு பெருமையாக கூறும்போதே நமக்கு தெரிந்துவிடும், ஏதோ ஒன்னுக்கு இவர் ஆசைப்படுகிறார் என்று. அதுமட்டுமின்றி, வீட்டுக்கு வா, உனக்கு நான் பரிசு தருகிறேன் என்றார். நான் என் பாட்டியுடன் போயிருந்தேன். நீ தனியா வருவேனு பார்த்தேன் என வைரமுத்து கூறினார். இல்லை, நான் எங்கு போனாலும் பாட்டியுடன்தான் வருவேன் என்றேன்.

அவருடைய நோக்கம் நான் வந்ததும் என்னை தொடவேண்டும். தொட்டுப் பார்த்து ஆசைப்பட வேண்டும் என்பதுதான். ஆனால் அது நடக்கவில்லை. அதன்பின், என் பாட்டி வைரமுத்துவிடம், உங்களைப் போன்றவர்களால்தான் இந்த மாதிரி பிள்ளைகள் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும். நீங்கள் அடுத்த தலைமுறைக்கு ஒரு தந்தை போல என சொன்னதும் வைரமுத்துவுக்கு வியர்த்து விட்டது. உடனே என்னுடைய பாட்டி, பரிசு தருகிறேன் என்று சொன்னீர்களே பரிசு எங்கே என கேட்டார். வீட்டுக்கு சென்று அங்கிருந்த இரு ஷாம்பு பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார். அதன்பிறகு அங்கிருந்து வந்துவிட்டோம். இருந்தாலும் தொடர்ந்து அவர் தரப்பிலிருந்து எனக்கு போன் வந்து கொண்டே இருந்தது. நான் கட் பண்ணி விடுவேன்.

சின்மயி வைரமுத்துவிடம் இருந்து பாலியல் ரீதியான துன்புறுத்தலை எதிர்கொண்ட போது அவருக்கு 18 வயது. ஆனால், அந்த சமயத்தில் அந்த விஷயத்தை அவரது அம்மா அப்படியே மூடி மறைத்து விட்டார். அவர் அப்பொழுதே இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால், அவர் அதை செய்யவில்லை. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சின்மயி, தனக்கு நடந்த கொடுமையை வெளியே சொன்னார். அப்போது சின்மயிக்கு சப்போர்ட்டாக யாருமே வரவில்லை' என தெரிவித்துள்ளார்.

Read Entire Article