ஆரியத்திற்கு முன்னோடி திராவிடம் என்றவர் ஜான் மார்ஷல் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 hours ago 3

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

100 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது. 1924, செப்20-ம் தேதி இதை அறிவித்த ஜான் மார்ஷலுக்கு நன்றி. திராவிட மொழி பேசும் மக்கள் ஆரியத்திற்கு முன்னோடி என நூறாண்டுக்கு முன் உலகிற்கு சொன்னவர் ஜான் மார்ஷல்.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது தொல்லியல்துறை தலைமை இயக்குநராக இருந்த ஜான் மார்ஷலால் சிந்து சமவெளி பண்பாடு என்பது திராவிட நாகரிகம் என கண்டறியப்பட்டது. அவரின் கண்டுபிடிப்பால் இந்திய துணைகண்ட வரலாறே மாற்றியமைக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவை சர்வதேச மாநாடு நடத்தி, ஜான் மார்ஷலுக்கு முழு உருவ சிலை தமிழகத்தில் நிறுவப்படும் என்று எனது அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இவ்வாறு அதில்தெரிவித்துள்ளார்.

Read Entire Article