நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்துக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று வருகைபுரிந்தார்.
தொடர்ந்து, வேதாரண்யம் அருகே அகஸ்தியம்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரகநினைவு ஸ்தூபியில் மலர்கள் தூவி மரியாதை செலுத்திய ஆளுநர், அங்குள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட காட்சி விளக்க மையத்தைப் பார்வையிட்டார். பின்னர், வேளாங்கண்ணிக்கு சென்று தங்கினார்.