சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்பேரவை தலைவர் த.வெள்ளையன் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிளை கிராமத்தில் இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் (76). நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல்சென்னை பெரம்பூரில் உள்ளஇல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர், பெரம்பூர் வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.