“வெளிநாடுகளில் அவதூறு பரப்பும் ராகுல் காந்தியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” - வானதி சீனிவாசன்

1 week ago 10

கோவை: “வெளிநாடுகளில் இந்தியா குறித்து அவதூறு பரப்பும் ராகுல் காந்தியை இந்திய மக்கள் மன்னிக்க மாட்டார்கள்,” என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

மக்கள் சேவை மையம் சார்பில், ‘விருட்சம்’ திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் குறுங்காடுகள் வளர்க்கும் திட்டத்தை கோவை சாய்பாபா காலனியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் இன்று (செப்.11) தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “மது ஒழிப்புக்காக பாஜக பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறது. திருமாவளவனுக்கு கூட்டணியில் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. வேங்கைவயல் உள்ளிட்ட விவகாரங்களில் கூட்டணியில் இருந்தபோது வாய் திறக்காதவர் இப்போது மது ஒழிப்பு குறித்து பேசியிருக்கிறார்.

Read Entire Article