“விசிகவின் மது ஒழிப்பு மாநாடு ஓர் ஏமாற்று வேலை; ஏனெனில்...” - ஹெச்.ராஜா தாக்கு

2 days ago 4

கோவை: “திருமாவளவன் அக்டோபர் 2-ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடைபெறுவதற்குள் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என முதல்வருக்கு அழுத்தம் கொடுக்காதது ஏன்? எனவே, திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு மக்களை ஏமாற்றும் வேலை” என கோவையில் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி கோவையில் இன்று (செப்.17) பாஜக சார்பில் ரத்த தான முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணியை நேரடியாக பார்வையிட வந்த போது, ‘மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைக்காக எவ்வளவு கோடியானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கிறது. ஆனால், நிலம் கையகப்படுத்தி கொடுப்பதில் தமிழக அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இதனால் சரியான நேரத்தில் பணி செய்ய முடியவில்லை’ என கூறியிருந்தார்.

Read Entire Article