“விசிக மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க பாமக, பாஜகவுக்கு அழைப்பு இல்லை” - திருமாவளவன்

1 week ago 11

கள்ளக்குறிச்சி: “உளுந்தூர்பேட்டையில் அக். 2-ம் தேதி நடைபெறும் மது ஒழிப்பு மாநாட்டில் ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் பங்கேற்கலாம். பாமக மற்றும் பாஜகவுக்கு அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்த கள்ளக்குறிச்சி கருணாபுரத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் 11 பேருக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக இன்று (செப்.11) கள்ளக்குறிச்சிக்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், 11 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிதி வழங்கினார். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் தற்போதைய வாழ்வாதாரம் குறித்தும், மதுவினால் ஏற்படும் பாதிப்பும் குறித்தும் பேசவைத்தார்.

Read Entire Article