லாட்டரி விற்பனை தொடர்பான வழக்கு: மார்ட்டின் குடும்பத்தினர் மனு தள்ளுபடி

3 days ago 5

சென்னை: கொல்கத்தா, நாகாலாந்து, சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் லாட்டரி விற்பனை தொடர்பான வருமான வரி வழக்கை கோவையில் இருந்து கொல்கத்தாவுக்கு மாற்றியதை எதிர்த்து லாட்டரி அதிபர் மார்ட்டின் குடும்பத்தினர் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமாரோஸ் மற்றும் அவரது மகள் டெய்ஸி ஆதவ் அர்ஜூனா மற்றும் அவர்களது கோவையைச் சேர்ந்த லாட்டரி விற்பனை நிறுவனமான சுவாலி ரியல் ப்ராப்பர்ட்டீஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “கோவையை பதிவு அலுவலகமாக கொண்டு இயங்கும் எங்களது லாட்டரி நிறுவனம் கொல்கத்தா, நாகாலாந்து, சிக்கிம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் லாட்டரி தொழிலை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்தாண்டு கொல்கத்தா வருமான வரித்துறையினர் எங்களது நிறுவனத்தில் ரெய்டு நடத்தி சோதனை மேற்கொண்டனர்.

Read Entire Article