மெடி சேஃப்!

1 week ago 5

உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நினைப்பவர்களுக்கு நண்பனாக உதவுகிறது மெடிசேஃப் (Medi safe) மருத்துவ செயலி.உங்கள் குடும்ப உறுப்பினர் நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் காலை, மதியம், இரவு வேளைகளில் அவர்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய மருந்து மாத்திரைகளைச் சரியான நேரத்துக்கு இச்செயலி நினைவூட்டுகிறது.இச்செயலியில் நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய மருந்துகள் குறித்த தகவல்களும், அம்மருந்துகளை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற தகவல்களும் மிக எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. மேலும், தேவைப்படும் மருந்துகள் அருகிலுள்ள எந்த மருந்தகத்தில் கிடைக்கும் என்பது போன்ற கூடுதல் தகவல்களும் இடம்பெற்றிருப்பது சிறப்பு. தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளை எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் அவை உடல் நலத்திற்கு நல்லதா என்பதையும் இச்செயலி மூலம் அறியலாம். சில ஆரோக்கிய ஆலோசனைகளும் இந்தச் செயலி மூலம் கிடைக்கப் பெறலாம்.

ஆஹா குதிரைவாலி!

*ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை வெளியிடுவதற்கு பெரிதும் உதவுகிறது. நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவாக பயன்பட்டு வருகிறது.
*குதிரைவாலியை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். செரிமான பிரச்னைகள், ரத்தசோகை நோய் உள்ளிட்டவற்றை குணப்படுத்துகிறது.
*அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப் படுபவர்கள் குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடவேண்டும். தினமும் சாப்பிட்டு வந்தால் சளி, காய்ச்சல் ஏற்படாமல் இருக்கும்.
*உடல் உறுப்புகளை தூய்மையாக்க பெரிதும் பயன்படுகிறது. நல்ல ஆன்டி ஆக்சிடன்டாக செயல்படுகிறது. செரிமான பிரச்னைகள், ரத்த சோகை ஆகியவற்றை குணப்படுத்துகிறது. மேலும் சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்துகிறது.
*உடலில் உள்ள தேவையில்லாத உப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது. சிறுநீரை அதிகமாக பெருக செய்கிறது. மேலும் கண் சார்ந்த அனைத்து பிரச்னைகளை சரி செய்யக்கூடிய பீட்டா கரோட்டின் குதிரைவாலியில் அதிகமாக உள்ளது.
*செரிமானத்தின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது.

The post மெடி சேஃப்! appeared first on Dinakaran.

Read Entire Article