மூடநம்பிக்கை பேச்சு விவகாரம்; பேச்சாளர் மகாவிஷ்ணு ‘பரம்பொருள் அறக்கட்டளை’க்கு அழைத்துவரப்பட்டு விசாரணை

1 week ago 12

திருப்பூர்: சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பேச்சாளர் மகாவிஷ்ணுவை, போலீஸார் இன்று (செப்.12) அவரது பரம்பொருள் அறக்கட்டளைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனரான பேச்சாளர் மகாவிஷ்ணு கலந்து கொண்டு மாணவியர் மத்தியில் பேசினார். அவரது பேச்சானது மாற்றுத்திறனாளிகளை காயப்படுத்தும் விதமாக இருந்தது. இதற்கு அந்த பள்ளியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் மகாவிஷ்ணு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Read Entire Article