முன்விரோத தகராறில் பைக்குகளை சேதப்படுத்தியவர் கைது

1 week ago 7

 

பண்ருட்டி, செப். 11: பண்ருட்டியை அடுத்த மருங்கூர் தோப்புக்கொல்லை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயபாலன் மகன் சிவராமன் (24). இவருக்கும், கீழக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிகுரு என்பவருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 9 மணிக்கு ஆதிகுரு, சிவராமன் வண்டியை நிறுத்தி தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த சிவராமனை அருகில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிவராமன், ஆதிகுரு வீட்டிற்கு சென்று, அங்கு நிறுத்தி வைத்திருந்த 2 பைக்குகளை சேதப்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஆதிகுரு, முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி வழக்கு பதிவு செய்து சிவராமனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

The post முன்விரோத தகராறில் பைக்குகளை சேதப்படுத்தியவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article