முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

1 week ago 15

 

புதுக்கோட்டை, செப்.11: முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். 12-ம் வகுப்பில் 60 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்ற முன்னாள் படைவீரர்களின் மகன் மற்றும் மகள்களுக்கு 2024-25ம் கல்வியாண்டின் தொழிற்கல்வி பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகிறது. இத்திட்டம் 2024-2025ம் கல்வியாண்டில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

கல்வி உதவித்தொகை ஆண்டுக்கு மாணவர்களுக்கு ரூ.30,000-மும், மாணவிகளுக்கு ரூ.36,000-மும் வழங்கப்படும். இவை முன்னாள் படைவீரர்களின் முதல் 2 சிறார்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் விபரங்களுக்கு www.ksb.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் அடிப்படையில் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் கால அவகாசம் 30.11.2024 வரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை அணுகலாம். இந்த தகலை கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

The post முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article