முதலமைச்சரை சந்தித்து மதுக்கடைகளை படிப்படியாக மூட கால அட்டவணை வெளியிட கோரினேன்: திருமாவளவன்

18 hours ago 5
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபோது மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கான கால அட்டவணையை வெளியிடுங்கள் என்று கேட்டுக்கொண்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் விசிகவின் மது ஒழிப்பு மாநாடு ஏற்படுத்தியிருக்கிறது என்றார். களமும் செயலும்தான் முதலமைச்சர் பதவியை நம் முன்பு கொண்டு வந்து நிறுத்தும் என்று திருமாவளவன் தெரிவித்தார். மக்களோடு இருந்து மக்கள் உணர்வுகளை பிரதிபலித்தால் மக்கள் நம்மை நிச்சயம் கைவிட மாட்டார்கள் என்றும் கூறினார்.
Read Entire Article