கிணற்றில் தவறி விழுந்த நர்ஸ் பலி

3 hours ago 3

சேந்தமங்கலம், செப்.20: கொல்லிமலை ஒன்றியம், எடப்புளிநாடு ஊராட்சியில் உள்ள சூரியவளவு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி. இவரது மகள் நதியா(19), ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு வந்த நதியா, வீட்டின் அருகேயுள்ள பொது கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக கால் தவறி கிணற்றில் விழுந்தார். பக்கத்தில் யாரும் இல்லாததால், நதியா தண்ணீரில் மூழ்கி பலியானார். கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்ற மகளை தேடிச் சென்ற பெற்றோர், கிணற்றில் சடலமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த செங்கரை போலீசார், நதியாவின் சடலத்தை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிணற்றில் தவறி விழுந்த நர்ஸ் பலி appeared first on Dinakaran.

Read Entire Article