மீனவர் பிரச்சினை: ராமேசுவரத்தில் மார்க்சிஸ்ட் செப்.20-ல் ஆர்ப்பாட்டம்

2 days ago 4

ராமேசுவரம்: தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி ராமேசுவரத்தில் வரும் செப்டம்பர் 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராமேசுவரம் தாலுகா செயலாளர் சிவா இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''தமிழக மீனவர்களை கைது செய்வதுடன், மீனவர்கள் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலை மோதி உயிரிழப்பை ஏற்படுத்துவது, சிறை தண்டனையுடன் அபராதம் விதிப்பது, அபராதத்தை செலுத்தவில்லை என்று கூறி மீனவர்களுக்கு மொட்டையடிப்பது, சிறையில் கைதிகள் பயன்படுத்தும் கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்து அவமதிப்பது என தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Read Entire Article