புதுச்சேரி: மிலாடி நபியை ஒட்டி ஜிப்மரில் வெளி நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு வரும் 17-ல் இயங்காது என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனினும் அவசர சிகிச்சைப் பிரிவு சேவைகள் வழக்கம் போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஜிப்மருக்கு புதுச்சேரி மட்டுமில்லாமல் விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை உட்பட பல ஊர்களில் இருந்து நோயாளிகள் தினசரி சிகிச்சைக்காக வருகின்றனர்.