சென்னை,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் 2-ந்தேதி மது-போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாடு குறித்து கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
"கள்ளக்குறிச்சி சாராய மரணம் தான் மதுவிலக்கு மாநாட்டை விசிக நடத்துவதற்கு காரணம். திமுகவை மிரட்டவும் சீட்டு பேரத்திற்காகவும் மாநாடு நடத்துவதாக சிலர் பேசுகிறார்கள். அதிமுகவுடன் கூட்டணி என சிலர் பேசிகிறார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் கூட்டணி, சீட்டு குறித்து சிந்திப்பேன். மாநாடு நடத்த வேண்டுமென்று எனக்கு சொல்லிக் கொடுத்தது மக்கள்தான்." என்றார்.