தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை - கலெக்டர் விளக்கம்

2 hours ago 2

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட துணை வட்டாட்சியர் கண்ணன் என்பவருக்கு வட்டாட்சியராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில் இதற்கு தூத்துக்குடி கலெக்டர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மு.கண்ணன் என்பவருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. தேர்தல் துணை வட்டாட்சியர் து.கண்ணன் என்பவருக்கே வட்டாட்சியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்று தூத்துக்குடி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் பதவி உயர்வு வழங்கப்பட்ட து.கண்ணன் என்பவருக்கும் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் பெயர் குழப்பம் காரணமாகவே தவறான செய்தி பரப்பப்பட்டுள்ளது என்றும் தூத்துக்குடி கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.

Read Entire Article