மதுரையில் கந்து வட்டியால் தம்பதி தற்கொலை முயற்சி... கணவர் உயிரிழப்பு இருவர் கைது

3 days ago 5
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கந்து வட்டி பணம் கேட்டு மகள்கள் முன்பாக தகாத வார்த்தைகளால் திட்டியதால், கணவன் மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்ததில் கணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கத்தப்பட்டி பகுதியில் கடன் வாங்கி பேக்கரி நடத்தி வந்த ராஜா -  மலைச்செல்வி தம்பதி, போதிய வருமானம் கிடைக்காததால் கடையை நடத்தமுடியாமல் மூடியுள்ளனர். இந்நிலையில்  கடந்த 11ஆம் தேதி அன்று  வினோத் என்பவர் தான் கொடுத்த கடனுக்கு வட்டி கேட்டு அவரது நண்பர் சிவாவுடன் சென்று, தம்பதியைத் திட்டியதாக மலைச்செல்வி கொடுத்த புகாரில் போலீசார் இருவரை கைது செய்தனர். 
Read Entire Article