மதுபாட்டில் பதுக்கிய இருவர் கைது

1 day ago 4

போடி, செப்.19: தேனி மாவட்டம், போடி நகர் காவல் நிலைய எஸ்ஐ குருகவுதம், அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார். சேதுபாஸ்கரன் தெரு பகுதியில் சென்றபோது, பாண்டி(70) என்பவர் தனது பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 8 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபோன்ற குற்றம் தொடர்பாக பாண்டி மீது ஏற்கெனவே 38 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல, வாமணன் தெரு பகுதியில் செல்வராணி(50) என்பவர் சட்ட விரோதமாக 8 மதுபாட்டில்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

The post மதுபாட்டில் பதுக்கிய இருவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article