“மது ஒழிப்பு மாநாட்டை யார் நடத்தினாலும் ஆதரவு தருவோம்” - அன்புமணி ராமதாஸ்

1 week ago 10

நாமக்கல்: “மது ஒழிப்பு மாநாட்டை யார் நடத்தினாலும் ஆதரவு தெரிவிப்போம்,” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பரமத்தி வேலூரில் இன்று (செப்.11) நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். தொடர்ந்து நாமக்கல் வந்த அன்புமணி ராமதாஸ் அங்கு செய்தியாளர்களிடம் கூறியது: “நாமக்கல் மாவட்டம் வழியாக காவிரி ஆறு செல்கிறது. ஆனால் இங்கு நிலத்தடி நீர் 1,300 அடிக்கு கீழே சென்றுள்ளது. வசதியானவர்கள் தான் விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. சமீபத்தில் காவிரி ஆற்றில் இருந்து 45 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்தது. அதில் ஒரே நாளில் 17 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது. காவிரி ஆற்றில் 10 கி.மீ.,க்கு தடுப்பணை கட்ட வேண்டும்.

Read Entire Article