மது ஒழிப்பு மாநாட்டில் திரளாக பங்கேற்க முடிவு வி.சி. கூட்டத்தில் தீர்மானம்

1 week ago 8

தக்கலை, செப்.12: விடுதலை சிறுத்தை கட்சியின் குமரி மைய மாவட்ட செயற்குழு கூட்டம் தக்கலையில் உள்ள கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் மேசியாதலைமையில் நடைபெற்றது.சுபாஷ், அருண், ஜஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு கூட்டத்திற்கு மேலிட பொறுப்பாளர் தமிழினியன், மண்டல செயலாளர் களக்காடு சுந்தர், மகளிர் விடுதலை இயக்க மாநில துணை செயலாளர் லேன்சி, மாநில துணை செயலாளர் முஹம்மது யூசுப் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், கள்ளக்குறிச்சியில் அக்டோபர் மாதம் 2ம் தேதி மகளிர் மட்டும் பங்கேற்கும் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டிற்கு கன்னியாகுமரி மைய மாவட்டத்தில் இருந்து அதிகமாக மகளிரை அழைத்து செல்வது, மதுரையில் வருகிற 20ம் தேதி நடக்கும் மண்டல அளவிலான கூட்டங்களில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் பங்கேற்க செய்ய வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post மது ஒழிப்பு மாநாட்டில் திரளாக பங்கேற்க முடிவு வி.சி. கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Read Entire Article