மது அருந்த பணம் தராததால் தற்கொலை

2 days ago 4

சாத்தூர், செப்.18: மது அருந்த பணம் தராததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாத்தூர் மேலகாந்திநகரை சேர்ந்தவர் கருப்பசாமி(45), இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் 2 வது மகன் தினேஷ்குமார் (22), கிடைக்கும் வேலையை செய்து கொண்டு அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் மது அருந்த பணம் இல்லாததால் தந்தை கருப்பசாமியிடம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதில் மனமுடைந்தவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post மது அருந்த பணம் தராததால் தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article