மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை: ஒரு மகன் மீட்பு

4 hours ago 4

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனுங்கூர் ஊராட்சி மேல சுக்காம்பட்டியை சேர்ந்தவர் அருண் (30). லாரி டிரைவர். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு தர்ஷன் (6), நிஷாந்த் (4) என்ற 2 மகன்கள். நேற்று காலை லட்சுமி, இரு மகன்களை தோட்டத்தில் உள்ள கிணற்றில் தள்ளிவிட்டு தானும் குதித்துள்ளார். இதில் லட்சுமி மற்றும் நிஷாந்த் பலியாகினர்.

தர்ஷன் மட்டும் மோட்டார் தொங்கவிட்ட கயிற்றை பிடித்துக்கொண்டு கூச்சலிட்டுள்ளான். சத்தம் கேட்டு அப்பகுதியில் சென்றவர்கள் தகவலின்படி தீயணைப்பு வீரர்கள் வந்து 3 மணி நேரம் உயிருக்கு போராடிய சிறுவன் தர்ஷனை மீட்டு, இனுங்கூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். இதுகுறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை: ஒரு மகன் மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article