போலீஸ் உடையில் வந்து பெட்ரோல் போட்டு பணம் தர மறுத்து தகராறு.. பங்க் ஊழியர்களை தாக்கிய நபரை கைது செய்த போலீசார்

6 days ago 4
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் காவல்துறையில் தலைமைக் காவலராக இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட மணிகண்டன் என்பவர் போலீஸ் உடையில் வந்து டூவீலருக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு பணம் தர மறுத்து பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கியதாக கைது செய்யப்பட்டார். போலீஸ் சீருடை அழுக்காகவும், மணிகண்டனின் முகத்தில் காயம் இருந்ததாலும் சந்தேகமடைந்த ஊழியர்கள் சரவணன் மற்றும் கனகநாதன் அவரை பிடித்து வைத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். 
Read Entire Article