போலி மதுபான வலையமைப்பு முறியடிப்பு: டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்

1 week ago 10

சென்னை: தமிழகத்தில் போலி மதுபானபாட்டில்கள் விற்பனை புழக்கத்தை கட்டுப் படுத்த தமிழ்நாடு அமலாக்கப் பணியகம் குற்றப் புலனாய்வு துறை அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மாநிலத்தில் நடத்திய முக்கிய சோதனையில் கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வந்த போலி மதுபான வலையமைப்பு முறியடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கடந்த 3ம் தேதி திருச்சியைச் சேர்ந்த முருகவேல் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளி, போலி மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், மத்திய நுண்ணறிவுப் பிரிவு திருச்சி மண்டல ஆய்வாளரான ராமன் தலைமையிலான குழுவினர், திருச்சி எடமலைபட்டி புதூர் சென்று முருகவேலை கைது செய்தனர். மேலும், அவர் பதுக்கி வைத்திருந்த 644 (750 மிலி) போலி மதுபாட்டில்களைக் கைப்பற்றினர்.

Read Entire Article