பொங்கல் டிக்கெட் முன்பதிவு: முக்கிய ரயில்களில் 5 நிமிடங்களில் முடிந்தது 

1 week ago 10

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (செப்.12) காலை தொடங்கிய நிலையில், தென் மாவட்டங்ளுக்கு புறப்படும் முக்கிய ரயில்களில் 5 நிமிடங்களிலேயே டிக்கெட் முன்பதிவு முடிந்தது.

அடுத்த ஆண்டு ஜன.14-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஜன.15-ம் தேதி (புதன்கிழமை) மாட்டுப் பொங்கல், ஜன.16-ம் தேதி ( வியாழக்கிழமை) காணும் பொங்கல் ஆகிய பண்டிகைகளும் வரவுள்ளன. மேலும், ஜன.13-ம் தேதி (திங்கள்கிழமை) போகி பண்டிகையும் கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு ரயில்களில் செல்ல வசதியாக, ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது.

Read Entire Article