பேப்பர் கிடங்கில் தீ விபத்து

4 days ago 5

பொன்னேரி: பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி ஊராட்சி கனகவல்லிபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பழைய பேப்பர், கோணி, பிளாஸ்டிக் சேகரிக்கும் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் நேற்று மதியம் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீவிபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், தீ அருகில் உள்ள வயல்வெளிக்கும் வீடுகளுக்கும் பரவாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதில் பழைய பேப்பர், கோணி சேகரிப்பு கிடங்கில் இருந்த பேப்பர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், கோணி, பஞ்சு ஆகியவை எரிந்து சாம்பலானது. ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

The post பேப்பர் கிடங்கில் தீ விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article