பேனா நினைவு சின்னம் | ‘விதிமுறைக்கு உட்பட்டுத்தான் எதுவும் நடக்கும்’ - அமைச்சர் சாமிநாதன்

1 week ago 7

கோவில்பட்டி: “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக வங்கக் கடலில் விதிமுறைக்கு உட்பட்டு பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும்,” என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று (செப்.12) காலை கோவில்பட்டியில் உள்ள கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணனின் மணிமண்டபத்துக்கு வருகை தந்தார். அவரைக் கோட்டாட்சியர் மகாலட்சுமி வரவேற்றார். மணிமண்டப வளாகத்தில் உள்ள கி.ரா.வின் முழு உருவ வெண்கல சிலைக்கு அமைச்சர் சாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அங்குள்ள டிஜிட்டல் நூலகம், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த கி.ரா.வின் புத்தகங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை அமைச்சர் பார்வையிட்டார்.

Read Entire Article