பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு புதிய தங்கத்தேரின் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்கள்..

5 days ago 6
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலுக்கு புதிதாக செய்யப்பட்ட தங்கத்தேரின் வெள்ளோட்டத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 11 கிலோ தங்கம், 27 கிலோ வெள்ளி மற்றும் 379 கிலோ செம்பு ஆகியவற்றை உருக்கி சுமார் 8 கோடியே 54 லட்சம் செலவில் தங்கத் தேர் செய்யப்பட்டுள்ளது. 11 புள்ளி 5 அடி உயரத்தில் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்டு பிரம்மன் தேரோட்டியாக உள்ளது போல் தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெள்ளோட்ட நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, மானிய கோரிக்கையில் அறிவித்தபடி ஒரு தேரின் வெள்ளோட்டம் நடத்தப்பட்டதாகவும், மீதமுள்ள 4 தங்கத் தேர்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்தார்.
Read Entire Article