பெண் போலீசார் 2 பேருக்கு காவலர்கள் பாலியல் தொந்தரவு: டிஜிபிக்கு 6 பக்க பரபரப்பு கடிதம்

4 days ago 4

சேலம்: தமிழக காவல்துறை டிஜிபிக்கு, சேலம் மாநகர ஆயுதப்படை பெண் போலீஸ் பெயரில் 6 பக்க புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: சேலம் மாநகர ஆயுப்படையில் பணியாற்றிக் கொண்டு, லைன்மேட்டில் உள்ள காவலர் குடியிருப்பில் அந்த பெண் போலீஸ் வசித்து வருகிறார். எதிர் வீட்டில் வசித்து வந்த காவலர், அவரது நண்பர்களுடன் ஓய்வு நேரங்களில் அவரது வீட்டின் கதவை திறந்து வைத்து மது குடித்துக்கொண்டு அரைநிர்வாணமாக நின்று கொண்டிருப்பார்கள். அந்த பெண் காவலரின் உள்ளாடைகளை எடுத்து மறைத்து வைத்துக்கொண்டு டார்ச்சர் செய்வார். கேலி செய்தும், தவறான செய்கைகளையும் காட்டுவார்கள்.

அதே போல வீட்டின் கதவை திறந்து வைத்துக்கொண்டு மதுபோதையில் இருந்தனர். இதனை தட்டிக்கேட்டபோது, அவரை தாக்கியதுடன் மேலாடையையும் கிழித்தனர். அவரது தாயையும் தாக்கினர். புகாரில் கூறப்பட்டுள்ளதில் உயர் அதிகாரி ஒருவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் இருக்கிறார். இதன்காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் விசாரணையை தீவிரப்படுத்த மாநகர போலீஸ் கமிஷனர் பிரவின்குமார் அபினபு உத்தரவிட்டுள்ளதால், துணை கமிஷனர் விசாரணை நடத்தி வருகிறார். இன்னொரு பெண் போலீசுக்கும் பாலியல் தொந்தரவு ெதாடர்ச்சியாக நடந்து வருகிறது.

The post பெண் போலீசார் 2 பேருக்கு காவலர்கள் பாலியல் தொந்தரவு: டிஜிபிக்கு 6 பக்க பரபரப்பு கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article