பூத் வாரியாக பாஜகவுக்கு 200+ உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு பரிசு: தமிழிசை சவுந்தரராஜன்

1 week ago 9

சென்னை: தென் சென்னை தொகுதிக்குப்பட்ட பகுதிகளில் பூத் வாரியாக 200-க்கும் மேற்பட்டோரை பாஜக உறுப்பினர்களாக சேர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என ஆலோசனைக் கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை பணி 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதில் புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். அத்துடன் ஏற்கெனவே கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், தங்களது உறுப்பினர் பதிவை புதுப்பித்துக் கொள்வார்கள். அந்தவகையில், நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை பணி கடந்த 2-ம் தேதி தொடங்கியது. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி, முதல் நபராக தனது உறுப்பினர் பதிவை புதுப்பித்துக்கொண்டார்.

Read Entire Article