புதுக்கோட்டை பொன்னமராவதி பகுதியை சேர்ந்த டிஎஸ்பி துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை

3 hours ago 3

 

பொன்னமராவதி,செப்.21: பொன்னமராவதி பகுதியை சேர்ந்த டிஎஸ்பி துரைப்பாண்டி, மாநில அளவிலான காவல் உயர் அலுவலர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். பொன்னமராவதி அருகே உள்ள வார்ப்பட்டு செல்லியம்பட்டியை சேர்ந்தவர் துரைப்பாண்டியன், டிஎஸ்பியாக சென்னையில் காவல் உளவு பிரிவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

காவல் உயர் அலுவலர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்றதோடு, முழுமையாக அணைத்துப் போட்டிகளில் வெற்றி பெற்று அதிலும் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். காவல்துறை துணைத் தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பாராட்டி வாழ்த்தினர். துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற துரைப்பாண்டிக்கு சக காவல்துறை அலுவலர்கள், செல்லியம்பட்டி ஊர் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

The post புதுக்கோட்டை பொன்னமராவதி பகுதியை சேர்ந்த டிஎஸ்பி துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை appeared first on Dinakaran.

Read Entire Article