புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து இண்டியா கூட்டணி பந்த்: மக்கள் கடும் அவதி

1 day ago 4

புதுச்சேரி: மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த் போராட்டம் இன்று (புதன்கிழமை) காலை தொடங்கியது. பந்த் காரணமாக தனியார் பஸ்கள், ஆட்டோ, டெம்போ ஓடவில்லை. கடைகள் மூடப்பட்டிருந்தன. தமிழக பஸ்கள் வராததால் பயணிகள் அவதியடைந்தனர். அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

புதுச்சேரியில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மக்களவைத் தேர்தல் குறுக்கிட்டதால், மின் கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைத்தது. தேர்தல் முடிந்த பின் ஜூன் 16-ம் தேதி முன்தேதியிட்டு மின் கட்டண உயர்வை அரசு அமல்படுத்தியுள்ளது. மின் கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக அரசு மீது எழுந்தது.

Read Entire Article